என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வந்தவாசி கொலை
நீங்கள் தேடியது "வந்தவாசி கொலை"
வந்தவாசி அருகே நிலம் சம்பந்தமான முன்விரோதத்தில் அண்ணனை தம்பியை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த அறுவடை தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 51) விவசாயி.
இவரது சகோதரரர் தாமோதரன் (48) இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் அருகில் உள்ள எஸ்.நாவல்பக்கம் ஏரிக்கரை அருகே உள்ளது.
இதில் நிலத்துக்கு செல்வது சம்பந்தமாக பாலாஜிக்கும் தாமோதரனுக்கு முன்விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த மாதம் இரு தரப்பினரும் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு பாலாஜி அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு தனது விவசாய நிலத்தில் பூஜை செய்ததாக தெரிகிறது.
அங்கு சென்ற தாமோதரன் நிலத்தில் மாந்திரீக பூஜை செய்து விவசாயம் செய்ய முடியாமல் இருக்க செய்வதாக கருதி தனது அண்ணனிடம் தகராறு செய்தார். தாமோதரனுக்கு ஆதரவாக அவரது மனைவி சாந்தா (43) மகன் அமர்நாத் (25) ஆகியோர் ஒன்று சேர்த்து தட்டிக் கேட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமோதரன் சரமாரியாக கத்தியால் பாலாஜி தலை உடல் பகுதிகளில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரன் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த அறுவடை தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 51) விவசாயி.
இவரது சகோதரரர் தாமோதரன் (48) இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் அருகில் உள்ள எஸ்.நாவல்பக்கம் ஏரிக்கரை அருகே உள்ளது.
இதில் நிலத்துக்கு செல்வது சம்பந்தமாக பாலாஜிக்கும் தாமோதரனுக்கு முன்விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த மாதம் இரு தரப்பினரும் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு பாலாஜி அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு தனது விவசாய நிலத்தில் பூஜை செய்ததாக தெரிகிறது.
அங்கு சென்ற தாமோதரன் நிலத்தில் மாந்திரீக பூஜை செய்து விவசாயம் செய்ய முடியாமல் இருக்க செய்வதாக கருதி தனது அண்ணனிடம் தகராறு செய்தார். தாமோதரனுக்கு ஆதரவாக அவரது மனைவி சாந்தா (43) மகன் அமர்நாத் (25) ஆகியோர் ஒன்று சேர்த்து தட்டிக் கேட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமோதரன் சரமாரியாக கத்தியால் பாலாஜி தலை உடல் பகுதிகளில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரன் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X